யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் காணமல் போன மாடுகள் மீட்பு!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் மருதங்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை (14-01-2023) இரவு திருடப்பட்ட மாடு மறுநாள் காலையில் வடமராட்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்டிருந்த மாடு இன்னொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில காலமாக தென்மராட்சியின் எழுதுமட்டு வாழ் வரணி மற்றும் மிருசுவில் பகுதிகளில் இருந்து கால் நடைகள் திருடப்பட்டு வடமராட்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.